கடந்த சில நாட்களாக பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்திய வானிலை மையம் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
Enewz Tamil WhatsApp Channel
அதோடு தமிழகத்தின் கடலோர மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அதாவது வடகிழக்கு வங்க கடல், வடமேற்கு வங்கக்கடல் உள்ளிட்டவற்றில் சூறாவளி காற்று 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளதாம். இதனால் இன்று மற்றும் நாளை கடலுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…, அகவிலைப்படியை அதிரடியாக உயர்த்திய ரயில்வே வாரியம்!!