தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு – உடனே இதை முடிங்க., கல்வித்துறை முக்கிய கண்டிஷன்!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும் என்ற முக்கிய சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கல்வித்துறை சுற்றறிக்கை :

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்ய, ஒரு முக்கிய மதிப்பீட்டு திட்டம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திட்டத்தின் வாயிலாக ஆசிரியர்கள், தங்களை சுயமதிப்பீடு செய்து கொண்டு மாணவர்களின் கற்றல் நிலையை மேம்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கப்பள்ளி முதல், மேல்நிலைப்பள்ளி வரை உள்ள அனைத்து ஆசிரியர்களும் இந்த மதிப்பீட்டு நிலை குறித்த மாதிரி படிவங்களை பெற்று, தங்களின் செயல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது குறித்த முக்கிய குறிப்புகளை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழுதி தர வேண்டும். இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் முறையாக பின்பற்ற வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here