தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான பல்லாயிரக் கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இதனால், தமிழக அரசு அதிரடியான ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் மே மாதம் 31 ஆம் தேதிக்குள் (31.05.2024) ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், முதற்கட்டமாக 2800 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.