நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு மட்டுமல்லாமல் வங்கி உள்ளிட்ட அனைத்து துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் தேர்வாணையம் அறிவித்து வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊழியராக பணிபுரிய பலரும், பயிற்சி நிறுவனங்களில் பணம் செலவழித்து தேர்வுக்கு முனைப்புடன் தயாராகி வருகின்றனர். ஆனால் ஏழை எளியோர் நிதி பிரச்சனையால், முறையான பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அரசு துறை மற்றும் பொதுத்துறை வங்கிக்கான TNPSC, SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்கள் மற்றும் மாநில கல்லூரியில் 300 இடங்களில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. பயன் பெற விரும்புபவர்கள் www.cecc.in என்ற இணையதளத்தில் பிப்.12 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அட., மரண தண்டனையை கூட இப்படி கொடுக்க முடியுமா?? கொலை குற்றவாளிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!