பொதுவாக நம் நாட்டை பொறுத்தவரை கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு நூதனமான மரண தண்டனை கொடுத்த செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 1988 ஆம் ஆண்டு மத போதகர் ஒருவர் ஆயுள் காப்பீடு தொகையை பெறுவதற்காக தனது மனைவியையே ஆட்களை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். பின்னர் இந்த குற்றம் போலிஸுக்கு தெரிய வந்த நிலையில் மதபோதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மதபோதகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் மத போதகரின் மனைவியை கொலை செய்த இரண்டு குற்றவாளிகள் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு 2010 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு விஷ ஊசி செலுத்தி தண்டனை கொடுக்க நீதிமன்றம் முயற்சி செய்தது தோல்வியடைந்துள்ளது. இதனால் தற்போது அவருக்கு நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. நைட்ரஜன் வாயுவால் சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அந்த குற்றவாளி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.