தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை ஆய்வு செய்து பள்ளி கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்தனர். தற்போது இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களின் பணி வரன்முறை கருத்துருவை தயார் செய்து மின்னஞ்சலில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். அதன் பின் கையொப்பமிட்ட நகலை பள்ளி கல்வித்துறை இயக்குநகரத்தில் ஒப்படைக்க வேண்டும். இதில் எந்த ஒரு தலைமை ஆசிரியரின் பெயரும் விடுபடக்கூடாது. ஒருவேளை ஏதேனும் ஆசிரியர் பெயர் விடுபட்டிருந்தால் அந்தப் பொறுப்பை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தான் ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.