தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், தேசிய பள்ளிகள் என பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவற்றில் சில தனியார் பள்ளிகளில், மாணவர்கள் வகுப்பறையில் தமிழில் பேச கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையில் தமிழில் பேசி உள்ளான்.
இதனால், வகுப்பறையில் இருந்த ஆசிரியர் நாயகி அந்த மாணவனின் காதை திருகுகியதால், காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆத்திரமடைந்து ஆசிரியரை தாக்கி உள்ளனர். இதன் விளைவாக மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.