நாடு முழுவதும் பொதுமக்கள் பலரும் பெரும்பாலும் ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். இதனால் மக்களுக்கு பயண நேரத்தின் போது எந்த சிரமமும் ஏற்பட கூடாது என்பதற்காக பல வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்தாண்டு வருமானத்தை இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நாளுக்கு நாள் ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே தான் உள்ளது. இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு வழித்தடத்தில் ரயில் பாதைகள் அமைக்க இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.