இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதை தொடர்ந்து 436 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் விளாசினர். இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 4 விக்கெட்களையும், ரெஹான் அகமது மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியானது தனது 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் தான்? புதிய விதியால் ஷாக்!!!