தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!!

0

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜு அவர்களின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வரும் பாதிப்பு எண்ணிக்கையால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக.,வைச் சேர்ந்த இரண்டு மூன்று எம்எல்ஏ.,க்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை – நிறுவனத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு!!

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிமுக கட்சி எம்எல்ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அக்கட்சி தலைமையை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here