இந்தியாவில் டிக்டாக் செயலி தடை – நிறுவனத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு!!

0

இந்தியா மொபைல் போன்களின் செயலிகளை தடை செய்ததனின் மூலம் தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்துள்ளது.

யுனிகார்ன் நிறுவனம் கணிப்பு..!

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்தியா – சீன வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக இந்தியாவில் சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இவற்றில் சீன தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் யுனிகார்ன் பைட்டான்ஸ் லிமிடெட் நடத்தும் டிக் டாக், ஹலோ, விகோ வீடியோ ஆகிய 3 செயலிகளும் அடங்கும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

china apps
china apps

இந்த மூன்று செயலிகளுக்கு தடை விதித்ததன் மூலம் தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்துள்ளது. இந்த நஷ்டம் மற்ற 56 செயலிகளுக்கு ஏற்படும் மொத்த இழப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here