தமிழக விவசாயிகளே., மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம்., அமைச்சரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக விவசாயிகளே., மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம்., அமைச்சரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்பதால் பல விவசாயிகளும் அதிக விலைக்கு பாலை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டு வரும் பால் தட்டுப்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி “கறவை மாடு விவசாயிகளின் பால் உற்பத்தியை பெருக்க வங்கி உதவியுடன் கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் கறவை மாடு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுவதால் பால் உற்பத்தி மேம்படும்.” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here