தமிழக பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ல் விடுமுறை…, இந்த மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

0
தமிழக பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ல் விடுமுறை..., இந்த மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தம் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலாக மாற கூடும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.
இதையடுத்து, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here