தமிழகத்தில் பெண்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்ட பலன்களை பெற 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 1.065 கோடி குடும்ப தலைவிகள் மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் (அக்டோபர் 18) முடிவடைய உள்ள நிலையில், இதுவரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு கோடி பேருக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என அறிவித்த நிலையில், மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமை தொகை கிடைக்குமா? என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இந்நிலையில் தகுதி வாய்ந்த அனைத்து மகளிர்களுக்கும் உரிமை தொகை திட்டம் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களே…, தீபாவளி போனஸ் உங்களுக்கு எவ்வளவு தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!