ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகைக்காக அரசு ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை போனஸ்ஸாக வழங்கப்படுவது வழக்கம். இந்த வகையில், வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அப்டேட் ஒன்றை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போனஸ் மற்றும் கருணைத்தொகை போக்குவரத்து ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் வழங்கப்படும். ஆனால், கொரோனா காலக்கட்டத்தில் இந்த தொகை 10 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வரை 10% தான் வழங்கப்பட்டது. இதையடுத்து, போனஸ் பட்டுவாடா சட்டத்திருத்தத்தின்படி 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டுக்கான போனஸ்ஸாக ஊதியத்தில் இருந்து 25% வழங்குவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணம் இரட்டிப்பு., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!