மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 12 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதேபோல் அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள “தேஜ்” புயல் தீவிரமாகி வருவதால், மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்னும் ஓரிரு நாட்களில் ஏமன் மற்றும் ஓமன் கடற்கரை பகுதிகளில் கடக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி., இனி டெங்கு காய்ச்சல் பயம் இருக்காது? இந்த மாத்திரை போதும்?