இந்திய மக்களை கடந்த சில மாதங்களாக உலுக்கி வந்த டெங்கு காய்ச்சல் தற்போது உலகின் பல நாடுகளை தாக்கி வருகிறது. உலகளவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதிலும் 2 மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 1500 பேருக்கும் மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என ஆய்வு தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் 4 வகையான டெங்கு வைரஸுக்கு எதிராக அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மாத்திரை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையின் முதல் கட்ட சோதனையில் ரத்தத்தில் இருக்கும் டெங்கு வைரஸின் அளவை குறைத்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரையின் 2 ஆம் கட்ட சோதனை தற்போது தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.