![மகளிர் ரூ.1,000 உரிமை தொகை: இந்த காரணத்தால் தகுதியான குடும்ப தலைவிகள் நீக்கம்., அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்த அரசு!!! மகளிர் ரூ.1,000 உரிமை தொகை: இந்த காரணத்தால் தகுதியான குடும்ப தலைவிகள் நீக்கம்., அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்த அரசு!!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/FEA-9-3.jpg)
தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை பெறுவதற்கு 1.63 கோடி பேர் விண்ணப்பித்ததில் 1.065 கோடி பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுதியற்ற சில பயனாளிகளும் இத்திட்டத்தில் பயனடைந்து வருவதாக புகார் எழுந்து உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து மகளிர் உரிமை தொகை பெற்று வரும் குடும்ப தலைவிகளின் வருமான வரி, மின்சார பயன்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தகுதியற்றவர்கள் என கண்டறிய படுமானால், அவர்களை கலைஞர் மகளிர் திட்டத்தில் இருந்து நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு முறை தகுதியானவர் என கூறி விட்டால் வாழ்நாள் முழுவதும் உதவி தொகையை வாங்கலாம் என்ற நிலை மாறியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது மீண்டும் ஒரு தாக்குதல்? அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் அறிவிப்பு!!!