கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ராமேஸ்வர மீனவர்கள் உட்பட 28 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த நிலையில் கோடியக்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மீனவர்களின் செல்போன், ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உட்பட ரூ.50,000 மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.