![விளையாட்டில் விரோதத்துக்கு இடமில்லை., அப்படிபட்ட கேம் அவசியமில்லை., உலகநாயகனின் அதிரடி பேச்சு., பிக்பாஸ் ப்ரோமோ!! விளையாட்டில் விரோதத்துக்கு இடமில்லை., அப்படிபட்ட கேம் அவசியமில்லை., உலகநாயகனின் அதிரடி பேச்சு., பிக்பாஸ் ப்ரோமோ!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/ff-7-6-768x352.jpg)
பிக்பாஸ் ஷோவில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரில் ஒருவர் இன்று உலகநாயகனால் வெளியேற்றப்பட உள்ளார். அதற்கு முன் இந்த வாரம் நடந்தது குறித்து ஒவ்வொன்றாக கமல் சார் விசாரித்து வருகிறார். இந்நிலையில் இன்றைக்கான 3 வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து விளையாடிய போது நடந்ததை பற்றி விசாரிக்கிறார். அப்போது விஷ்ணு விஜய் மிகவும் முரட்டுத்தனமாக விளையாடியதாக கூறுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
அதற்கு விஜய் முதலில் அப்படி விளையாடியதே விஷ்ணு தான், மேலும் அவர் நினைத்திருந்தால் அந்த கேமில் ஈஸியாக வெற்றி பெற்றிருக்கலாம் என கூறுகிறார். அதன் பின்னர் பேசிய கமல், விளையாட்டு என்றால் சண்டைகள் வர தான் செய்யும் என பிரதீப் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அந்த விளையாட்டு எல்லையை தாண்டுகிறது என தெரிந்து விட்டால் அதை நிறுத்தி விட வேண்டும். தனிப்பட்ட கோபத்துக்கு அங்கு இடம் கொடுக்க கூடாது என கூறினார்.