தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநில பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரு கல்வியாண்டு முழுவதும் மாணவனின் கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளின் பங்கேற்பினை, அவர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த பள்ளிகள் தோறும் “ஆண்டு விழா” கொண்டாடப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 37,576 அரசு பள்ளிகளிலும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் “ஆண்டு விழா” நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் விரைந்து முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.