தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இப்போது பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் சில தினங்களில் 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் இப்போது தமிழக பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது காஞ்சிபுரத்தில் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை முன்னிட்டு இப்பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் நிகழக்கூடும். இதனால் மாணவர்கள் சிரமம் படக்கூடாது என்பதற்காக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆந்திர சன் பள்ளி பச்சையப்பன் நாடக மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 பள்ளிகள் இன்று பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துள்ளனர்.