தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் தொடர்ந்து நிறுத்தி வைத்துக் கொண்டே இருந்தார். இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளுநரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தனர். அதன் பின் வழக்கு மீண்டும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், “ஆளுநரிடம் உச்ச நீதிமன்றம் கூறியதால் தான் முதலமைச்சரை சந்திப்பதாக சொன்னீர்களா?? நாங்கள் சொல்வதற்கு முன்னதாகவே முதலமைச்சரை நேரில் சந்தித்து நீங்களே பேசி இருக்க வேண்டும். முதலமைச்சருக்கும் ஆளுநருக்கு இடையே நல்ல உறவு இருந்தால் தான் பிரச்சனைகளை கலந்தாலோசித்து எதிர் கொள்ள முடியும்” என ஆளுநர் ஆர். என் ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவுறுத்தியுள்ளார்.