இனி.., கல்யாண மண்டபத்தில் சரக்கு பாட்டிலுக்கு அனுமதி.. ஐகோர்ட்டில் வெளியான தகவல்!!

0
இனி.., கல்யாண மண்டபத்தில் சரக்கு பாட்டிலுக்கு அனுமதி.. ஐகோர்ட்டில் வெளியான தகவல்!!
இனி.., கல்யாண மண்டபத்தில் சரக்கு பாட்டிலுக்கு அனுமதி.. ஐகோர்ட்டில் வெளியான தகவல்!!

திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற கூடாது என்று சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து வழக்கறிஞர் பாலு என்பவர் எதிர்த்து தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மதுபானம் வழங்க வகை செய்யும் வகையில் விதிகளில் திருத்தங்கள்  செய்யப்பட்ட மனு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா? என தெரிவிக்கும்படி அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில் இன்று அந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்து விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதுவரை திருத்த விதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்தும் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here