கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் வெளியிற் அல்லது வெளி மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்கோ செல்ல இ பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்தது. ஆனால் மக்களை அந்த இ பாஸ் பெறுவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகினர் எனவே மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து செய்ய பலர் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆனால் இப்போதைக்கு இ பாஸ் ரத்து இல்லை என அறிவித்தார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இ பாஸ் ரத்து இல்லை
தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திண்டுக்கல்லில் னால பனி திட்டங்களை தொடக்கி வைத்தார், பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இ பாஸ் மக்கள் பெற கடினமாக இருப்பதால் அதை எளிமையாக போவதாக கூறினார் பின் திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக திருநெல்வேலி சென்ற அவர் இன்று திருநெல்வேலியில் ரூ.196.75 கோடியில்நலப்பணி திட்டங்களையும், தென்காசியில் ரூ.78.77 கோடி மதிப்பிலான நலப்பணி திட்டங்களையும் துவக்கி வைத்தார். அந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் வீட்டு மனை பட்டா, அம்மா இரு சக்கர வாகனம், வேளாண்மை இயந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில், 5, 982 பயனாளிகளுக்கு, ரூ.36 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின் திருநெல்வேலியில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை பார்வையிட்டார். பின் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி கொரோனா நோயை தடுக்க நம் அரசு பல முயற்சிகளையும் தடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது, கொரோனா நோயில் இருந்து விடுபட்டவர்கள் தாமாக முன் வந்து பிளாஸ்மா தானம் செய்து மற்றவர்களை காக்க உதவ வேண்டும் என கூறினார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசு நல பணிகள் பல செய்து வருகிறது என்றார். தமிழகம் கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது. இ-பாஸ் எளிமையாக வழங்க அதற்க்கான பணிகளை நடத்தி வருகிறது. சரியாக அவசியத்திற்கு மட்டுமே வெளியூர் செல்பவர்களுக்கு இ – பாஸ் வழங்கப்படும் மாற்றும் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும்.மற்றபடி இ பாஸ் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. இ பாஸ் ரத்து செய்ய வாய்ப்பில்லை என அவர் கூறினார்.