அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. இந்த சூழலில் இன்று (ஜன. 5) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட மாவட்ட பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையை கையாண்டு கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
முதல ஸ்னேகா.., அப்புறம் மீனாட்சி சவுத்ரி.. இப்ப நீங்களுமா? GOAT படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!!