கோலிவுட் திரையில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவில் கலக்கி வருபவர் தான் விஜய் சேதுபதி. கடந்த செப்டம்பர் மாதம் இவர் வில்லனாக நடித்து திரைக்கு வந்த ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து அசத்தியது. இதுபோக மேரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
அதில், நான் வில்லன் வேடங்களை ரசிக்கிறேன், நிஜ வாழ்க்கையில் என்னால் யாரையும் கொல்ல முடியாது என கூறியுள்ளார். அதை (படங்களில்) செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது, அதனை முழு மனதுடன் வெளிப்படுத்த முடியும் என்றார். மேலும் திரையில், நீங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம், விளையாடலாம், அது வேடிக்கையாக இருக்கும் என தெரிவித்தார். தயவு செய்து என்னைப் பற்றி தவறாக நினைக்காதீர்கள் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று (ஜன. 5) கனமழை பிச்சு உதறும்? வானிலை மையம் அதிரடி அறிவிப்பு!!!