தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்த சமயத்தில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக கண்டறியப்பட்டு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் தகவல்:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நாள் முதல், தமிழகத்தின் அனைத்து கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. காலை நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில், நேரம் செல்ல செல்ல குறைந்து மாலை நேரங்களில் கன மழையாக கொட்டி தீர்த்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. மக்கள் அனைவரும் இதற்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருப்பதால், கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தீபாவளி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் சூழல் உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. இது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.