கடந்த வாரம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் தகுந்த சான்றிதழ் விவரங்களை www.mycertificates.in என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து, தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக மாணவர்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.