இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது போட்டி நேற்று முன்தினம் (டிசம்பர் 21) தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்களை குவித்து இருந்தது. இதையடுத்து 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்த்ரகர் சிறப்பாக விளையாடி அசத்தினர். இவர்களுக்கு அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி 406 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி அசத்தியது. இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடியும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த இயலவில்லை. எனவே இன்றைய நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை குவித்து 46 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. இதையடுத்து நாளை 4ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
பத்மஸ்ரீ விருதுகளை திருப்பி அளிக்கும் மல்யுத்த வீரர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!