இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மல்யுத்த வீரர் விரேந்திர சிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்காததால் ஒன்றிய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார்.
பிரிஜ் பூஷன் சிங்குக்கு நெருக்கமான வரை மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்துள்ளார். மேலும் இனி எந்தவித மல்யுத்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளதும் நினைவுகூரத்தக்கது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.