தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், கடந்த வாரம் பெய்த கனமழையால் பல்வேறு நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் கலந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றுப்படுகையில் உள்ள குடியிருப்புகள் பலவும் பெருமளவில் சேதத்தை சந்தித்தது.
தற்போது மழைப்பொழிவு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் மணிமுத்தாறு ஆணை 18 அடியை எட்டி உள்ளதால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.