ஒவ்வொரு மாதமும் வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வங்கிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் 7 நாள்கள் வங்கி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை 7,14,21,28 ஆகிய தேதிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் வங்கிகள் இயங்காது. ஜூலை 13 இரண்டாவது சனி, ஜூலை 27 நான்காவது சனி ஆகிய தினங்களில் வங்கிகள் இயங்காது. அதோடு ஜூலை 17 புதன்கிழமை மொஹரம் பண்டிகை வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.