தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.., உங்க மாவட்டம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.., உங்க மாவட்டம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.., உங்க மாவட்டம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையில் நாளை இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுபோக, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு பகுதி வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(08.11.2022) – முழு விவரம் உள்ளே!!

இந்நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் 9 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here