கடுமையான கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் தனியாக இயங்கி வரும் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசால் விரைவாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம்:
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் திரையரங்குகள், மால்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று அனைத்தும் முடக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சம் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது.
நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட காஜல் – வைரலாகும் புகைப்படம்!!
தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுடன் தொடர்ச்சியாக தியேட்டர்களை திறக்க அனுமதி கோரி வந்தனர். அண்மையில் மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. வரும் 15 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதே போல் திரையரங்குகள் திறப்பு குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியது.
பல நெறிமுறைகள்:
இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை பரிசலித்த தமிழக அரசு வரும் 22 ஆம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனி திரையரங்குகளை திறக்க மட்டும் தற்போதைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இதற்காக திரையரங்கு தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. தின்பண்டங்கள் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் நாட்களில் வழங்கும் என்றும் தெரிகிறது. இதற்கு பின், மால்களில் உள்ள திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படும்.