தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு.., கருணை மதிப்பெண் வழங்க திட்டம்.., காரணம் இது தான்!!!

0

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 22ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இப்போது விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மே 6ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிளஸ் டூ வேதியியல் பொதுத்தேர்வில் மூன்று மதிப்பெண் வினாக்களில் சில குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள் மிகவும் தவித்தனர். இதனால் இந்த கேள்விக்கு விடை எழுத முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி இந்த கேள்வியை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மூன்று மதிப்பெண்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNUSRB தேர்வில் வெற்றி பெற இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here