தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற அலர்ட்.,,4 நாட்கள் வெளுத்து வாங்க போகும் கனமழை.,பொதுமக்களே உஷார்!!

0
தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற அலர்ட்.,,4 நாட்கள் வெளுத்து வாங்க போகும் கனமழை.,பொதுமக்களே உஷார்!!

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை:

வடகிழக்கு பருவமழை சில தினங்களுக்கு முன்பு தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் , புதுவையிலும் தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் இந்த வடகிழக்கு பருவமழை இயல்பாக பெய்யும். இதனால் வருடத்திற்கு 44% மழை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் (அக்.,31) மற்றும் நாளையும் (நவம்பர்..01) தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழகத்தில் அக்.,31, நவம்பர்.,01 ஆகிய 2 நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக அக்டோபர் 31, நவம்பர் 1, 2 , 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக வெளியில் செல்ல வேண்டும். மேலும் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவைகளை எடுத்து செல்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here