தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை:
வடகிழக்கு பருவமழை சில தினங்களுக்கு முன்பு தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் , புதுவையிலும் தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் இந்த வடகிழக்கு பருவமழை இயல்பாக பெய்யும். இதனால் வருடத்திற்கு 44% மழை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் (அக்.,31) மற்றும் நாளையும் (நவம்பர்..01) தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழகத்தில் அக்.,31, நவம்பர்.,01 ஆகிய 2 நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக அக்டோபர் 31, நவம்பர் 1, 2 , 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக வெளியில் செல்ல வேண்டும். மேலும் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவைகளை எடுத்து செல்வது நல்லது.