திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஓசூர் டாடா நிறுவனம் இணைந்து வரும் 18ம் தேதி பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்:
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை முகாம்கள், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக ஏராளமான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் நவ.18ஆம் தேதி (நாளை மறுநாள்) பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநர் ச.பிரபாவதி தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமில், வேலைவாய்ப்பு இல்லாத பெண்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
- நிறுவனம் : ஓசூர் டாடா நிறுவனம்
- பணியிடத்தின் பெயர்: இளநிலைத் தொழில் நிபுணர்கள்
- தேதி மற்றும் இடம்: வெள்ளிக்கிழமை (18.11.2022), திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரி
- பெண் வேலை நாடுநா் கல்வி தகுதி : 12ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
- வயது வரம்பு : 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
வேலைவாய்ப்புக்கான பயிற்சி: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.