தமிழ்நாடு மாநில பள்ளி கல்வித்திட்டத்தில் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த 26ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 12) முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளதாக தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அதன்படி மாநிலம் முழுவதும் 88 மையங்களில், சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து 2024 மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.