ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வழித்தடங்களில், அவ்வப்போது பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கோவை ரயில் நிலையம் அருகே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக,
- நாளை மறுநாள் (ஏப்ரல் 14) மற்றும் ஏப்ரல் 16 ஆகிய 2 நாட்களுக்கு சொரணூர் to கோவை செல்லும் ரயில் (எண் 06458) போத்தனூர் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். மறுமார்க்கமாக மீண்டும் அங்கே இருந்தே இயக்கப்படும்.
- அதேபோல் இந்த 2 தினங்களிலும் மேட்டுப்பாளையம் – கோவை ரயில் (எண் 06813) மற்றும் கோவை – மேட்டுப்பாளையம் ரயில் (எண் 06814) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
SSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? இது ரொம்ப முக்கியம்?