இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 52 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் மும்பை அணி 15.3 ஓவரில் 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.