நாடு முழுவதும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய மாநில அரசுத்துறை மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சண்டிகர் மாநிலத்தில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் (PU) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் மக்களவை தேர்தல் வாக்குறுதி., இதெல்லாம் உறுதி? முழு விவரம் உள்ளே…
அதன்படி PU கல்லூரியில் பயிலும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என துணைவேந்தர், ரேணு விக் அறிவித்துள்ளார். இந்த திட்டம் 2024-25ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது மாணவிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.