தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அண்மைக்காலமாக மயிலாடுதுறை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சிறுத்தை மயிலாடுதுறையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்குள் புகுந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார். அதேபோல் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.