தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் பலரும் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக சார்பாக கோவை தொகுதியில் போட்டியிடும் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், தங்களது மக்களவை தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு உள்ளார்.
அதில்,
- கோயம்புத்தூர் தொகுதியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (IIM), மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் (NCB), 4 நவோதயா பள்ளிகள், காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.’
- இது தவிர சர்வதேச அளவில் கோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படுவதோடு கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.
- கோவையின் தேவைகள் எனும் தலைப்பில் வேட்பாளர்களை சந்திப்பது, அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் நிகழ்ச்சி போன்ற ஏற்பாடு செய்யப்படும். குறிப்பாக நதிநீர் இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும்.
- மேலும் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் பாஜக அண்ணாமலை வாக்குறுதி தந்துள்ளார்.