சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், அனுதினமும் லட்சக்கணக்கானோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கேற்ப பயணிகளின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து வந்தது. இந்த நிலையில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி மெட்ரோ ரயில் கட்டணம் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் வகையில் விநியோகிக்கப்பட்ட ரூ.59 க்கான விடுமுறை அட்டையும் ரத்து செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மெட்ரோ ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.