இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 25வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 196 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய மும்பை அணி 199 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது RCB அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இச்சாதனை படைத்த பும்ராவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.