கடன் விவகாரம்.. ஆவணங்களை வழங்க விஷாலுக்கு அவகாசம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

0
கடன் விவகாரம்.. ஆவணங்களை வழங்க விஷாலுக்கு அவகாசம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் புரட்சி தளபதி விஷால். இவர் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ஒரு படத்தை தயாரிக்க அவர் மதுரை அன்புச்செழியன் என்பவரிடம் இருந்து சில கோடிகளை கடனாக வாங்கினார். ஆனால் இந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்த நிலையில், லைகா நிறுவனம் இதனை ஏற்றுக்கொண்டு திருப்பி கொடுத்தது.

இதனால் இந்த கடன் தொகையை லைக்காவுக்கு விஷால் திருப்பி செலுத்தும் வரை அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களின் உரிமைகளை லைகா நிறுவனத்திற்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஷால் அந்த உத்தரவை மீறி தனது தயாரிப்பில் நடித்த வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட்டார்.

இதன் காரணமாக இந்த படத்தை தடை செய்ய கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று இரு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க நடிகர் விஷாலுக்கு அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here