ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

0
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், ஆலையை மூடி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரியும் வேதாந்தா குழுமம் சென்னை ஐகோர்ட் இல் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கான வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வாதம்

ஸ்டெர்லைட் ஆலையானது அடிப்படை விதிமுறைகளை கூட பின்பற்றாமல் செயல்பட்டு வந்ததாகவும், தற்போது ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விதிமுறைகளை பின்பற்ற தயார்

வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனவும், இனி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற தயார் எனவும், அரசு ஏதேனும் புது விதிமுறைகள் தெரிவித்தால் அதையும் பின்பற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here