தூத்துக்குடியில் சரக்கு வாகனம் கோர விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு!!

0

தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி அருகே திடீரென்று சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. தற்போது விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி:

நாட்டில் நாள் ஒன்றுக்கு 100கும் மேற்பட்ட சாலை விபத்துகள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் விபத்துகள் குறைந்தபாடில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இதேபோல் ஓர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு விவசாய பணிக்காக சரக்கு வாகனத்தில் விவசாயிகள் சென்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சரக்கு வாகனம் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே சென்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் அனைவரும் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தினால் விவசாய பணிக்கு சென்ற 5 பெண்கள் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

புதிய தொழிற்கொள்கை – தமிழக முதல்வர் இன்று வெளியீடு!!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அந்த 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் என்று தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here