தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை தொடர்ந்து தென்மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மிதமான முதல் லேசான மழை பெய்து வருகிறது.
மிமிக்ரி ஆர்டிஸ்ட் கோவை குணா இன்று காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
இதைத்தொடர்ந்து அடுத்த சில நேரங்களில் மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.